சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு தொடர்ந்து ஆதரவு – அமெரிக்க அட்மிரல் ஜான் அக்விலினோ உறுதி

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ நிலை குறித்த அமெரிக்க செனட் சபையில் ஆயுத சேவைகள் குழு உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்டர் அட்மிரல் ஜான் அக்விலினோ, பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா-அமெரிக்க ராணுவ உறவுகள் இப்போது உச்சத்தில் இருக்கின்றன.  இந்தியா எங்களது மிகப்பெரிய பங்காளியாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். 
தகவல் பகிர்வைத் தொடரவும், சீனாவுடனான உண்மையான எல்லைக்
கட்டுப்பாட்டுக் கோட்டில் அவர்களுக்கு(இந்தியாவிற்கு) தேவையான உபகரணங்களுடன் தொடர்ந்து ஆதரவளிப்போம். 
மேலும் பிராந்தியம் முழுவதும் கூட்டாளியாகவும் இணைந்து செயல்படுவோம்.ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் போர் பயிற்சி மிகவும் முக்கியமானது.
இரு நாடுகளுக்கும் இடையே  2+2 பேச்சுவார்த்தை அடுத்த மாத தொடக்கத்தில் வாஷிங்டனில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா சீனா இடையே நேற்று (வெள்ளிக்கிழமை)  உயர்மட்ட ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அமெரிக்க அட்மிரலின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.