ரவுடிகளுடன் சேர்ந்து மது அருந்திய போலீஸ் அதிகாரி சஸ்பெண்டு

திருவனந்தபுரம்:

கேரளாவில் போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு ரவுடிகளுடன் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதுபற்றி சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பதிவிடப்பட்டது.

இந்த நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவர் ரவுடிகளுடன் சேர்ந்து மது அருந்தும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இது போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.

இச்சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. நிஷாந்தினி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் ரவுடிகளுடன் சேர்ந்து மது அருந்தியது போத்தன் கோடு போலீஸ் நிலைய அதிகாரி ஜீகன் என தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக பணியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

மேலும் அவருடன் மது அருந்திய ரவுடிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் மீது பல்வேறு கொலை வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.