துமகூரு : துமகூரின் ஏ.சி.பி., தானாக முன் வந்து புகார் பதிவு செய்வதில்லை. ஆவணங்கள், சாட்சிகளுடன் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் பரவியுள்ளது.ஊழலை ஒழிப்பதற்காக துமகூரில் ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படை செயல்படுகிறது.
இதற்கு முன், ஊழல் குற்றச்சாட்டு இருந்தால், தானாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்தும். ஆனால் ஏ.சி.பி., போதிய ஆவணங்கள், சாட்சிகளுடன் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது.அரசு அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் ஊழல் தாண்டவமாடியும் கூட ஏ.சி.பி., தானாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதில்லை.ஆறு ஆண்டுகளில் துமகூரு ஏ.சி.பி., ஊழல், சட்டவிரோத சொத்து குவிப்பு, அரசின் பணத்தை தவறாக பயன்படுத்தியது, நீதிமன்ற உத்தரவு பெற்ற வழக்குகள் உட்பட 87 வழக்குகள் மட்டுமே பதிவு செய்தது. இவற்றில் ஆறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது. சாட்சி, ஆதாரங்கள் இன்மையால், எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். மற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.துமகூரு ஏ.சி.பி., டெபுடி எஸ்.பி., மல்லிகார்ஜுன் கூறுகையில், ”விசாரணை நேரத்தில், சில சவால்கள் எதிர்க்கொள்கின்றன. ”இதை சமாளித்து விசாரணை நடத்துகிறோம். நிர்வகிப்பு நடைமுறையை மேம்படுத்தும் நோக்கில், நேர்மையாக பணியாற்றுகிறோம்,” என்றார்.
Advertisement