தடுப்பு சுவரில் கார் மோதி குழந்தை உட்பட 4 பேர் பலி

திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம், ஏலூருக்கு ஒரு குடும்பத்தினர் நேற்று காலை காரில் சென்றனர். ஆந்திர மாநிலம், ஜக்கையப்பேட்டை மண்டலம் கவுரவ் அருகே கால்வாய் மேம்பாலத்தின் மீது வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புசுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. அங்கு விரைந்து வந்த போலீசார், இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்டனர். காரில் இருந்த 6 பேரில் 3 பேர் உடல் நசுங்கி பலியாகி கிடந்தனர். படுகாயமடைந்த 6 மாத குழந்தை உட்பட 3 பேர் மீட்டு ஜக்கையப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 6 மாத குழந்தை இறந்தது. இது குறித்து சிலக்கல்லு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.