"ஏவுகணை அமைப்பு மிகவும் நம்பகமானது": நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் விளக்கம்

புதுடெல்லி
கடந்த 9-ந் தேதி இந்திய ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது.  பராமரிப்பு பணியின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக பாய்ந்து சென்று விட்டதாகவும், இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் இந்திய ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்தது. எனினும் பாகிஸ்தான் இதை ஏற்க மறுத்தது. 

இந்த நிலையில், மேற்கூறிய விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: – பாகிஸ்தானின் மியான்கன்னு நகரில் ஏவுகணை விழுந்ததில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதிக்குள் பாய்ந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
வழக்கமான பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணியின் போது  இரவு 7 மணியளவில் ஏவுகணை பாய்ந்தது.  ஆயுத அமைப்புகளின் பாதுகாப்பு விஷயத்தில் அரசாங்கம் “அதிக முன்னுரிமை” அளிக்கிறது. நமது ஏவுகணை அமைப்பு மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது ஆகும்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.