பல்வேறு சவால்கள் இருந்த போதிலும் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் 22,500 பேர் பாதுகாப்பாக மீட்பு..

பல்வேறு சவால்கள் இருந்த போதிலும், போர் நடைபெறும் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் 22,500 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அமைச்சர், பிரதமரின் அறிவுறுத்தலின்படி, ஆபரேசன் கங்கா என்ற பெயரில் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டதாக குறிப்பிட்டார். குறிப்பாக சுமி நகரில் இருந்து இந்தியர்களை மீட்டது கடும் சிக்கலாக இருந்தது என்று அவர் கூறினார்.

உக்ரைன், ரஷ்யா அதிபர்கள் மற்றும் போலந்து உள்ளிட்ட அதன் அண்டை நாடுகளின் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேசி, இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஆதரவு கோரியதை அவர் சுட்டிக்காட்டினார். மொத்தம் 90 விமான சேவைகள் மீட்பு பணிக்காக இயக்கப்பட்டன என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.