சட்டக்கல்லூரியில் இரு மாணவர் சங்கத்தினர் இடையே மோதல்.. சங்க தலைவியை தரதரவென இழுத்து சென்ற காட்சி..!

திருவனந்தபுரம் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர் சங்கத்தினர் இடையே நடந்த மோதலில், சங்க தலைவியை இழுத்து சென்ற காட்சி வெளியாகி உள்ளது.

அந்த கல்லூரியில் மாணவர் சங்க தேர்தல் நடந்து வருவதால், இந்திய மாணவர் சங்கம் மற்றும் கேரள மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். கேரள மாணவர் சங்க தலைவியான ஷப்னா கல்லூரிக்குள் ஆதரவு திரட்டிய போது, எதிர்ப்பு தெரிவித்த இந்திய மாணவர் சங்கத்தினர் அவரை கீழே தள்ளி, தரதரவென இழுத்து சென்று தாக்கினர்.

இதனை தடுக்க முயன்ற போது ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.

இதில் தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.