”காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிக்க ஆதரவு” – குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி நீடிக்க அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலலில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியும் அமைந்துள்ளது. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து நேற்று ஆலோசனை நடத்தினர். ஜி 23 என்ற அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வீட்டில் நடைபெற்றது. மூன்று முறை இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் இன்று மாலை சந்தித்து பேசினார்.
Congress is one party, there is only one president, says Ghulam Nabi Azad  after meeting Sonia Gandhi - India News
சோனியா காந்தியிடம் ஜி-23 கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டதாக குலாம் நபி ஆசாத் கூறினார். மேலும் அவர் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும் சோனியா காந்தியே தலைவர் பதவியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளித்துள்ளதாகவும் கூறினார்.
அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக போராடுவது குறித்தும் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.