காதல் செய்தி – மனம் திறந்த மஞ்சிமா மோகன்

நடிகர் கவுதம் கார்த்திக், மஞ்சுமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில வாரங்களாகவேசெய்திகள் வைரலாகி வருகிறது. அதோடு மஞ்சிமாவின் பிறந்தநாளுக்கு கவுதம் கூறிய வாழ்த்து செய்தியும் வைரலானது. அதையடுத்து அவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நேரத்தில் நடிகை மஞ்சிமா மோகன் அளித்துள்ள ஒரு பேட்டியில், கவுதம் கார்த்திக்கின் காதலை நான் ஏற்கவில்லை. என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவங்களை யாரிடத்திலும் நான் மறைத்ததில்லை. சின்ன விஷயமாக இருந்தாலும் அதை வெளிப்படையாகக் கூறி வருகிறேன். அப்படி இருக்கும்போது திருமணம் போன்ற பெரிய நிகழ்வுகளை மறைக்க வேண்டியதில்லை. திருமணம் குறித்த தகவல் வெளியான போது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. நான் அதை கண்டுகொள்ளவில்லை. இது போன்ற செய்திகள் வெளியாகி வந்தபோது எனது பெற்றோரின் ரியாக்சன் என்னவாக இருக்குமோ என்று அதிர்ச்சியுடன் இருந்தேன். ஆன போதிலும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.