சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அகரம் பகுதியைச் சேர்ந்த தேசிங்கு என்ற அந்த நபர், கடந்த 2019ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தேசிங்குவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.