ஜெலென்ஸ்கியுடன் நேருக்கு நேர்: உக்ரைன் தொடர்பில் கசிந்த புடினின் தொலைபேசி அழைப்பு


உக்ரைனுடன் அமைதிக்கான தனது கோரிக்கைகளை ஜனாதிபதி விளாடிமிர் புடின் விவரித்து தொலைபேசியில் பேசிய விவரங்கள் தற்போது கசிந்துள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழக்கிழமை பிற்பகல் துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்தோகனுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
மட்டுமின்றி, உக்ரைனுடனான சமாதான உடன்படிக்கைக்கான தனது நிபந்தனைகள் என்ன என்பதையும் விளக்கியுள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்பின் போது, ஜனாதிபதி எர்தோகனின் முன்னணி ஆலோசகரும் செய்தித் தொடர்பாளருமான இப்ராஹிம் கலினும் மறுமுனையில் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரிகளில் ஒருவர் என தெரிய வந்துள்ளது.

இதில், உக்ரைன் கண்டிப்பாக நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது எனவும், உக்ரைன் நடுநிலையாக இருக்க வேண்டும் எனவும் புடின் நிபந்தனை வைத்துள்ளார்.

மேலும், ரஷ்யாவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதிப்படுத்த உக்ரைன் ஆயுதக் குறைப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் புடின் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, உக்ரைனில் ரஷ்ய மொழியை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மேலும், சில பேச்சுவார்த்தைகள் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் நேருக்கு நேர் இருக்க வேண்டும் என்றும் புடின் வலியுறுத்தியதாக தெரிய வந்துள்ளது.

ஆனால், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் ஜெலென்ஸ்கி முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, புடினுடன் நேருக்கு நேர் இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்பதே.

இதனிடையே, இந்த சமாதான ஒப்பந்தமானது இலக்கை அடைய நீண்ட நேரம் ஆகலாம் எனவும், ரஷ்யா சின்னாபின்னமாக்கியுள்ள நகரங்களை உக்ரைன் மீண்டும் கட்டும் வரை நீண்ட காலம் ஆகும் என்றே நிபுணர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில், குறிப்பிடும் அளவுக்கு இந்த வாரத்தில் ரஷ்ய துருப்புகளால் முன்னேற்றம் காண முடியவில்லை என்றே உக்ரைன் தொடர்பில் பிரித்தானிய உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.