நான் 'இதை' சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன்: வெற்றிமாறன் கூறிய பகீர் தகவல்…!

வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய
மதிமாறன்
இயக்கத்தில் உருவாகியுள்ள படம்
செல்ஃபி
.
ஜி.வி பிரகாஷ்
,
கெளதம் மேனன்
நடிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில், வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

தமிழகத்தில் பல மாணவர்களின் உயிர்களைக் காவு வாங்கிய நீட் தேர்வு குறித்து இந்தப்படத்தில் பேசப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய
வெற்றிமாறன்
, “மதிமாறன் சுய மரியாதையுடன் இருப்பவன். ஒரு குறும்படம் எடுத்து என்னிடம் வந்தான். அதைப் பார்த்து விட்டு அவனை என்னோடு சேர்த்துக் கொண்டேன். ஒரு நல்ல சினிமாவுக்கான எனர்ஜி அவனிடம் இருந்தது.

‘ஆடுகளம்’ படம் ஷூட்டிங்கில் மதிமாறன் ஜூனியர். ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் அவன் வேலை ரொம்ப பெரியது. ‘செல்ஃபி’ படத்தின் படப்பிடிப்பை 29 நாட்களில் முடித்து விட்டான். ஆச்சர்யமாக இருந்தது. இந்தப் படம் மூன்று மடங்கு லாபம் வரும் என்று தாணு சார் சொன்னார். ரொம்ப பெருமையாக இருக்கிறது. நான் படம் பார்த்துவிட்டேன். படத்தில் ஒரு ரா எனர்ஜி இருக்கிறது.

நடிகர் சூரியை பார்த்து மிரண்டு போன அஜித்: அப்படி என்ன பண்ணிருப்பாரு..?

நான் ஒரு விஷயத்தை சொல்ல கூடாதுன்னு நினைச்சேன். மதிமாறன் எந்த ஒரு இடத்திலும் என் உறவினர் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை. எனக்கு வெற்றிமாறன் என பெயர் வைத்தது மதிமாறனின் அப்பாதான். அவர் என் மாமா. நிறைய பேர் என்கிட்ட கேப்பாங்க உங்களுக்கு எப்படி இந்த பெயர் வந்துச்சி ஒருவேளை நீங்களே வச்சிக்கிட்டிங்களான்னு.

நான் வைக்கல என் மாமாவுக்கு மாறன் என்ற பெயர் ரொம்ப புடிக்கும், அதனாலதான் எனக்கு வெற்றிமாறன் என்றும், இவருக்கு மதிமாறன் என்றும், இன்னொரு உறவினருக்கு தமிழ் மாறன் என்றும் வைத்தார். இந்தப் பெயர் வைத்த என் மாமாவுக்கு நன்றி” இவ்வாறு தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.

“Radhe Shyam” படம் எப்படி இருக்கு ?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.