பெண்கள் உலகக்கோப்பை : வங்காளதேச அணிக்கு 141 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

மவுண்ட் மவுங்காணு,
பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மவுண்ட் மவுங்காணுவில் இன்று நடைபெற்று வரும் 17-ஆவது லீக் போட்டியில் வங்காளதேச அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷெமைன் கேம்பல் 53 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
வங்காளதேச அணி தரப்பில் சல்மா காதுன், நஹிதா அக்டர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதை தொடர்ந்து 141 ரன்கள் இலக்குடன் வங்காளதேச அணி விளையாடி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.