மார்ச் 21 முதல் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுத்த திடீர் முடிவு?

கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கில் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள சுாங்சுன், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட நகரங்களில்
முழு ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதே போல், ஐரோப்பிய நாடுகளான, நெதர்லாந்து,
ஆஸ்திரியா
உள்ளிட்ட நாடுகளிலும், கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவது, அந்நாட்டின் சுகாதாரத் துறையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அந்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 28 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மார்ச் 23 முதல் மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுக்கும் முடிவு!

ஆஸ்திரியா சுகாதாரத் துறை அளித்துள்ள தகவலின்படி, 3,033 பேர் தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 221 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதை அடுத்து கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க ஆஸ்திரியா அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரியாவில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.