#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் மீதான ரஷியா போர் 23-வது நாள்- ரஷிய தூதர்கள் வெளியேற பல்கேரியா கெடு

போலந்து எல்லையில் இருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ள லிவிப் நகரத்தின் விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் ரஷியா இன்று ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.
18-03-2022
17.45: ரஷியா மற்றும் பெலாரஸ் உடனான வழக்கமான வர்த்தக உறவுகளை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு
17.30: ரஷிய தூதரக அதிகாரிகள் 10 பேரை வெளியேற பல்கேரியா. கெடு விதித்துள்ளது.

17.15: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷிய அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

17.00: மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த தியேட்டர் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. கட்டிட இடுபாடுகளில் இருந்து இதுவரை 130 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன மனித உரிமைகள் அமைப்பின் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

16.00: லிவிவ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விமான பராமரிப்பு ஆலை மீது இன்று காலையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. லிவிவ் நகரம், போலந்து எல்லையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது.
லிவிவ் நகர் மீது கருங்கடல் பகுதியில் இருந்து ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 6 ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், அதில் 2 ஏவுகணைகளை அழித்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
15:50: தென்கிழக்கு நகரமான மரியுபோல், ரஷிய படைகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
15.45: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அத்னாம், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் என மொத்தம் 43 இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 34 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளா்ர.
15.40: உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவிகளை வழங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
15.30: மரியுபோல் நகரில், மக்கள் அடைக்கலம் புகுந்திருந்த தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல் நிலையில் அங்கு உயிருடன் உள்ளவர்களை மீட்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.