வங்கதேசத்தில் இஸ்கான் கோவிலை சேதப்படுத்திய மர்ம கும்பல்| Dinamalar

டாகா: வங்கதேச தலைநகர் டாகாவில் உள்ள இஸ்கான் ராதாகண்டா கோவிலை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

கோவிலில் இருந்த இரண்டு பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்., மாதம், வங்கதேசத்தில் ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நலகாளி நகரில் உள்ள இஸ்கான் கோவிலை கடந்த அக்டோபரில் தாக்கிய கும்பல், பக்தர் ஒருவரையும் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது தாக்குதல் டாகாவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.