அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி பேருந்தில் பயணம் செய்த மாவட்ட ஆட்சியர்..!

“காஃபி வித் கலெக்டர்” என்ற பெயரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தியதோடு, அவர்களுடன் பேருந்திலும் பயணம் செய்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

image

அவர்களுடன் இயல்பாகப் பேசி அறிவுரைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமீரன், தன்னுடைய பால்ய கால நினைவுகளை, தனது தனிப்பட்ட ஆசைகள் ஆகியவற்றையும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து சுற்றுலா பேருந்தில் மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து பயணம் மேற்கொண்டார்.

 image

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.