ஆஹா… அந்த விஷயத்தை சொல்லி… ஜாலியாக ஹோலி கொண்டாடிய ஐஸ்வர்யா!

கணவர் தனுஷை பிரிந்த பிறகு தன் போக்கில் விருப்பப்படி வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யார். முசார்ஃபிர் ஆல்ப பணியில் தீவிரமாக இருந்து வந்தார். இதுதொடர்பான போட்டோக்களையும் வீடியோக்களைவும் வெளியிட்டு வந்தார்.

கடந்த 3 மாதங்களாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த ஆல்பம் நேற்று முன் தினம் வெளியானது. தமிழ் வெர்ஷனை நடிகர்
ரஜினிகாந்த்
வெளியிட்டார். தெலுங்கு வெர்ஷனை மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜூன் வெளியிட்டிருந்தனர்.

ரஜினி கொடுத்த ‘அந்த’ கிஃப்ட்டை இன்னமும் பத்திரமாக வைத்திருக்கும் தனுஷ்!

மலையாள வெர்ஷனை நடிகர் மோகன் லால் வெளியிட்டிருந்தார். இந்த ஆல்பம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் வெளியானது. இந்நிலையில் நேற்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு
ஐஸ்வர்யா
கலர் பொடிகளை பூசி ஹோலி கொண்டாடியுள்ளார்.

அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஐஸ்வர்யா. மேலும் சில வண்ணங்கள் இல்லாத வாழ்க்கை என்ன!?… ஹோலி எங்கள் குடும்பத்திற்கு கூடுதல் சிறப்பு.. ஏனெனில் “சிவாஜிக்கு “ரஜினிகாந்த்” என்று இந்த நாளில் எங்கள் அன்பான கே.பாலச்சந்தர் தாத்தா பெயரிட்டார், அது அங்குதான் தொடங்கியது …. நாளை கலரை கழுவி விடுங்கள்… ஆனால் புன்னகையுடன் இருங்கள்…. என குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)

சிவாஜி ராவ்வாக சினிமாவில் நடிக்க வந்தவருக்கு ரஜினிகாந்த் என பெயரை மாற்றி வைத்தவர் பாலச்சந்தர். ஹோலி திருநாளில்தான் இந்த விசேஷ சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் இதனை கூறி ஹோலி கொண்டாடியுள்ளார் ஐஸ்வர்யா. இந்த போட்டோவிலும் அவரது கையில் இன்ஜெக்ஷனுக்கான செரின் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.