உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மீண்டும் யோகி ஆதித்யநாத் இம்மாதம் 25 ஆம் தேதி பதவியேற்பு.!

உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மீண்டும் யோகி ஆதித்யநாத் இம்மாதம் 25 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பதவியேற்கிறார்.

லக்னோவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி ,மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளனர். சோனியா காந்தி, முலாயம் சிங், மாயாவதி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேச அமைச்சர்கள் பட்டியலும் தயாராகி விட்டதாகவும் அமித் ஷா மேற்பார்வையில் புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.