சீனாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பு.. கடந்த ஆண்டு ஜனவரிக்கு பிறகு முதல் முறையாக இருவர் உயிரிழப்பு

சீனாவில் புதிதாக 2 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மேலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு தற்போது தான் முதல் முறையாக கொரோனா பாதித்த இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவருமே பாதிப்புகள் மிக கணிசமாக அதிகரித்து வரும் ஜிலின் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஒமைக்ரான் பரவலால் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் தென்கொரியாவில் ஒரே நாளில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 329 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை 319 ஆக பதிவாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.