ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியா வருகை

புதுடெல்லி ,
2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று  இந்தியா வந்தார்.இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார் 
இந்த  அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று  இந்தியா  வந்தார் .இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு இன்று மாலை நடைபெறவுள்ளது.

டெல்லி வந்த கிஷிடோவை  மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், உள்ளிட்டோர் வரவேற்றனர் 
ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக கிஷிடா இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – ஜப்பான் இடையே இன்று மாலை நடைபெறும் இருதரப்பு மாநாட்டில் கிஷிடா பங்கேற்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.