தமிழ்நாட்டில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை 28.5 சதவிகிதம்! ஆய்வறிக்கை தகவல்…..

சென்னை: தமிழ்நாட்டி இளைஞர் வேலைவாய்ப்பின்மை 28.5%-ஆக உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த  நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான 2021 ஏப்ரல், மே மற்றும் ஜூன் வரை 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் நகர்ப்புற இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை சராசரி 25.5% ஆக இருந்தது. அதில், தமிழகத்தில் நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை 28.5%-ஆக இருந்தது.

பெண்களிடம் வேலைவாய்ப்பின்மையில் 67 சதவிகிதத்தோடு காஷ்மீர் முதல் இடத்திலும்,  59 சதவிகிதத்தோடு கேரளா இரண்டாம் இடத்திலும் இருந்தன. அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களுக்கான வேலை வாய்ப்பின்மை  50%-ற்கும் மேல் இருந்தது.

இதுகுறித்து தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  கடந்த ஆண்டு (2021)  ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களில் நகர்ப்புற இளைஞர்களிடையே வேலை வாய்ப்பின்மை 25.5%-ஆக இருந்ததாக  தெரிவித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தில் நீடித்தாலும் 2020-2021 -ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் 20.8 சதவிகிதத்தோடு ஒப்பிடுகையில் 2021-2022 -ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் 12.6% -ஆக குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.