திருமலை ஏழுமலையான் தரிசனம் விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு| Dinamalar

திருப்பதி:திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, ஏப்ரல் மாதத்திற்கான, 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம், ஏப்ரல் முதல் ஏழுமலையானுக்கு ஆர்ஜித சேவைகளை துவங்க உள்ளது.அதற்கான டிக்கெட்டுகள், நாளை முதல் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாளும், மே மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் 22ம் தேதியும், ஜூன் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் 23ம் தேதியும் இணையதள முன்பதிவில் வெளியிடப்பட உள்ளன.

இதற்காக, www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து கலந்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அடுத்து, திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜஸ்வாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சர்வதரிசன இலவச டோக்கன்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம், தினசரி 30 ஆயிரமாக உயர்த்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.