தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை காட்டிக்கொடுத்த சிசிடிவி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் பைக் திருட்டு சம்பவம் அரங்கேறி வருவதாக வந்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், 10க்கும் மேற்பட்ட சம்பவங்களில் தொடர்ந்து ஒரே நபர் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனிடையே இரு தினங்களுக்கு முன் வழிப்பறியில் ஈடுபட்டதாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரை செய்யாறு போலீசார் கைது செய்திருந்த நிலையில், விசாரணையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நபர் தான் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டவர் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 23 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.