பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை| Dinamalar

புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக டில்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் பியுமியோ கஷிடா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

ஜப்பான் பிரதமர் பியூமியோ கஷிடா இரண்டு நாள் பயணமாக டில்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்திய பயணத்தின் போது, 14வது இந்தியா ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில், முதல்முறையாக கஷிடோ கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக இந்த மாநாடு கடந்த 2018 ம் ஆண்டு நடந்தது.

இந்நிலையில், டில்லியில் இரு நாடுகளுக்கு இடையே இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் , ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பியுமியோ கஷிடோ சந்தித்து பேசினர். இரு நாட்டு உறவு மற்றும் பொருளாதாரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.