பிரேசிலில் டெலிகிராமை நாடு முழுவதும் தற்காலிகமாக ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

பிரேசில் நாட்டில் சமூக வலைதளமான டெலிகிராமை நாடு முழுவதும் தற்காலிகமாக ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீவிர வலதுசாரி ஆதரவாளரான பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவும், அவரது ஆதரவாளர்களும் டெலிகிராமை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தச் செயலியில் போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக போல்சனாரோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த விசாரணையை மேற்கொள்ளும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ், நீதித்துறை உத்தரவுகளை பலமுறை பின்பற்ற மறுத்துவிட்டதால் டெலிகிராம் செயலியில் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டார். நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து டெலிகிராம் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.