பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்ற பெண்களுக்கு வலைவீச்சு

ஆந்திர மாநிலம் சித்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை 3 பெண்கள் கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மங்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சபானா என்ற பெண்ணுக்கு கடந்த 14ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை குறைவாக இருந்ததால், ஐ.சி.யூ வார்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அதிகாலையில் பால் கொடுப்பதற்காக ஐ.சி.யூவில் இருந்து வெளியே கொண்டு வந்த சபானா, குழந்தையை தனியாக விட்டுவிட்டு கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

திரும்பி வந்து பார்க்கையில் குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், புகார் அளித்தார். மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், அதிகாலை 3 மணியளவில் 3 பெண்கள் கட்டைப்பையில் வைத்து குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இந்த சிசிடிவி காட்சி அடிப்படையில், 3 பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.