மகன்களுக்காக தாலாட்டு பாடிய தனுஷ்: நெகிழ்ந்து போன யாத்ரா, லிங்கா..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான
தனுஷ்
, ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்தனர்.

அவர்களின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கே பேரதிர்ச்சியாக அமைந்தது. விவாகரத்தை தொடர்ந்து மகன்கள் இருவரும் சில நாட்கள் தனுஷுடனும், சில நாட்கள் ஐஸ்வர்யாவுடனும் இருந்து வருகின்றனர். மேலும், தங்கள் பெற்றோர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என யாத்ரா, லிங்கா விரும்புவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியான ‘ராக் வித் ராஜா’ சென்னையில் நடந்தது. தீவிர
இளையராஜா
ரசிகரான தனுஷ் தனது மகன்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேடைக்கு கீழ் இளையராஜா பாடலை ரசித்த தனுஷ், அதன் பின்னர் மேடைக்கு சென்றார்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் ரீ என்ட்ரி: பாவனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

இசைஞானியிடம் உங்களோட நிலா அது வானத்து மேலே பாடல் மெட்டுல ஒரு தாலாட்டு பாட்டு எழுதியிருக்கேன் யாத்ரா, லிங்காவை நினைச்சு என சொன்ன தனுஷ், இளையராஜா அனுமதியுடன் பாடினார். “கண்மூடிடு பூவிழி மானே… தலாட்டிட பாடுறேன் நானே.. என் தோள்கள் உன் தூளியும் தானே ஆராரோ ஆரிரோ.. என மெலோடியாக பாடினர் தனுஷ்.

இதனை மேடைக்கு கீழ் இருந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் இளையராஜாவும் கைத்தட்டி ரசித்தார். மேலும் தனுஷின் மகன்களும் அப்பாவின் தாலாட்டை மெய் மறந்து ரசித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் தனுஷின் தாலாட்டு பாடலை பாராட்டி வருகின்றனர்.

DHANUSH

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.