ரஷ்யாவை சாராமல் இருக்க ஜேர்மன் மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய ஆதரவு!



ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்க வாரம் ஒரு நாள் கார் பயன்படுத்தாமல் இருக்க பெரும்பாலான ஜேர்மன் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஜேர்மனியில் WELT எனும் ஒளிபரப்பு நிறுவனம் நடத்திய Civey கருத்துக் கணிப்பின்படி, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க உதவும் வகையில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளைக்கு மட்டும் கார்களை பயன்படுத்தாமல் இருக்க 48 சதவீதம் மக்கள் ஆதரவளிக்க தயாராகி இருக்கின்றனர். அதேசமயம் 46 சதவீதம் பேர் இந்த யோசனையை எதிர்க்கின்றனர்.

ஜேர்மனியில் வருடம் ஒருமுறை ஜூன் மாதத்தில் Car-free Sunday என அனுசரிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜூன் 19-ஆமா திகதி ஞாயிற்றுக்கிழமை Car-free Sunday நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரியில் ஜேர்மனியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 26% அதிகரித்துள்ளது. எண்ணெய் இறக்குமதியில் 30% ரஷ்யாவைத்தான் ஜேர்மனி நம்பியுள்ளது. இந்த விலையுயர்வு ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க தூண்டியுள்ளன.

இந்த வாரம், வாகன ஓட்டிகளுக்கான கொடுப்பனவு (allowance) உட்பட இந்த ஆண்டு மொத்தம் 4.5 பில்லியன் யூரோக்கள் வரி நிவாரண நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

நிதியமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தற்காலிக தள்ளுபடியை அறிமுகப்படுத்த விரும்புகிறார், இது மூன்று மாதங்களில் அரசுக்கு 6.6 பில்லியன் யூரோக்கள் செலவாகும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.