5 எல்லைகளை சீரமைக்க ரூ.7,000 கோடியில் திட்டம்| Dinamalar

புதுடில்லி:எல்லை தாண்டும் பயங்கரவாதிகளை ஒடுக்க, நாட்டின் ஐந்து முக்கிய எல்லைகளில் உள்கட்டமைப்பை சீரமைக்க 7,000 கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், பூட்டான், மியான்மர் ஆகிய ஐந்து நாடுகளின் எல்லைகளில், ஊடுருவல் மற்றும் பயங்கரவாத செயல்களை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, 2023ம் ஆண்டுக்குள் 7,000 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு சீரமைக்கப்படும். இந்த திட்டத்தில் புதிய சாலைகள், பாலங்கள், கண்காணிப்பு கோபுரங்கள், அதிநவீன மின் விளக்குகள் ஆகியவை அமைக்கப்படும்.இந்த தகவலை, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.