9 வருடங்கள் ஆச்சு! நரிக்குறவர் கோரிக்கையை சுட்டிக்காட்டி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் உடனடியாக சேர்க்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
குருவிக்காரர், நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரைகளை லோகூர் வல்லுநர் குழு 1965 ஆம் ஆண்டிலும், நாடாளுமன்ற கூட்டுக்குழு 1967 ஆம் ஆண்டும் வழங்கியிருந்தது. இந்த சமூகங்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்கள் ஆகும். அவர்களைபழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அரசின் பாதுகாப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களை பெற முடியும் என அந்த குழுக்கள் தெரிவித்தன.
குருவிக்காரர்களுக்காக முதலமைச்சர் எடப்பாடியாரிடம் மன்றாடிய எம்.பி..! ST  பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல். | Urging Chief Minister Edappadiyar to add  MP to the list ...
தமிழக அரசும் குருவிக்காரர், நரிக்குறவர் சமூகத்தினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரைகளை ஏற்கனவே வழங்கியிருந்தது. இந்த பரிந்துரைகளுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய தலைமை பதிவாளர் கடிதம் மூலமாக ஒப்புதல் வழங்கியிருந்தார். இருந்தபோதிலும் அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட்டு அச்சமூகத்தினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள் வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.