இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி



நாட்டில் ஏற்பட்டுள்ள கடதாசி தட்டுப்பாடு காரணமாக மின் கட்டண பட்டியல் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தனது அலுவலகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மின் கட்டண பட்டியல்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர், துணைப் பொது மேலாளர் எண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தற்போது மின் கட்டண பட்டியல் இல்லாத இடங்களில் சாதாரண கடதாசிகளில் குறிப்பிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் அவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் இலங்கை மின்சார சபையினால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்ககப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் எண்ட்ரூ நவமணி, மேலும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.