ஏப்ரல் 1ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட ரயில்வே சேவை இயக்கம்.. மகிழ்ச்சியில் பயணிகள்.!

கொரோனா காலக்கட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட முன்பதிவில்லா  எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படுகிறது.

திருப்பதி-புதுச்சேரி இடையே காலை 4.20 மணிக்கும், புதுச்சேரி-திருப்பதி இடையே மதியம் 2.55 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.

மேலும், சூளூர்பேட்டை-நெல்லூர் இடையே 3.50 மணிக்கும், நெல்லூர்-சூளூர்பேட்டை இடையே 6.50 மணிக்கும், திருவனந்தபுரம் சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே காலை 6.50 மணிக்கும், நாகர்கோவில்- திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே 6.20 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.