ஒரே நபரால் காதலில் விழுந்து, கண்ணீர் விட்ட சமந்தா, ஏமி ஜாக்சன்

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை தெலுங்கில் ஏ மாய சேசாவே என்கிற பெயரில் எடுத்தார்
கவுதம் மேனன்
. அந்த படத்தில் நடித்தபோது தான் நாக சைதன்யா,
சமந்தா
இடையே காதல் ஏற்பட்டு திருமணம் நடந்தது.

அந்த திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை இந்தியிலும் எடுத்தார் கவுதம்.

இந்தியில் பிரதீக் பாபர்,
ஏமி ஜாக்சன்
நடித்தார்கள். ஏக் தீவானா தா என்கிற அந்த படத்தில் நடித்தபோது பிரதீக் மற்றும் ஏமி இடையே காதல் ஏற்பட்டது. பிரதீக்கின் பெயரை தன் கையில் பச்சை குத்தினார் ஏமி.

இருவரும் காதலில் தீவிரமாக இருந்தார்கள். ஆனால் அந்த காதல் நிலைக்கவில்லை. ஏமியை பிரிந்தபோது மிகுந்த வேதனை அடைந்ததாக பிரதீக் தெரிவித்தார்.

காதல் முறிவுக்கு பிறகு ஏமி மும்பை பக்கம் செல்வதை நிறுத்திவிட்டார். இப்படி சமந்தா, ஏமி ஜாக்சன் வாழ்க்கையில் காதல் ஏற்பட கவுதம் மேனன் தான் காரணமாக இருந்திருக்கிறார்.

காதலை அழகாக திரையில் காட்டுவதில் கில்லாடி கவுதம். அவரின் படத்தில் நடித்தபோது சமந்தாவுக்கும், ஏமிக்கும் தங்கள் ஹீரோக்களின் மீது காதல் ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை.

பிரதீக்கை பிரிந்த ஏமி, இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனயோட்டுவை காதலித்தார். நிச்சயதார்த்தமும் நடந்தது. குழந்தையும் பெற்றெடுத்தார். ஆனால் குழந்தை பிறந்த பிறகு ஜார்ஜை பிரிந்துவிட்டார் ஏமி.

Dhanush:தனுஷுக்கு ஒன்னுல்ல, இரண்டு காதலி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.