கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி| Dinamalar

துமகூரு : கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் கவிழ்ந்ததில், 6 பேர் உயிரிழந்தனர். 64 பேர் படுகாயமடைந்தனர்.ஒய்.என்.ஹொஸ்கோட்டிலிருந்து பாவகடாவுக்கு தனியார் பஸ் ஒன்று நேற்று காலை பள்ளி மாணவர்கள் உட்பட 80க்கும் அதிகமான பயணியருடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் மேற்பகுதியிலும் பலர் அமர்ந்திருந்தனர்.

பாலவள்ளிகட்டே அருகே சென்றபோது, வேகமாக சென்ற பஸ், வலதுபுறம் திரும்பும் போது, பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.கவிழ்ந்த வேகத்தில், பஸ்சின் மேற்பகுதியில் இருந்த பயணியர் வெளியே துாக்கி வீசப்பட்டனர். பஸ்சின் அடியில் கல்யாண், 18, அஜித், 21, நவாஸ், 19, அமுல்யா, 17, அர்ஷிதா, 21, உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக வந்து உதவினர். பஸ்சில் சிக்கியோர், துாக்கி வீசப்பட்ட என 64க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இதில், 17 பேர் துமகூரு மாவட்ட அரசு மருத்துவமனையிலும்; 47 பேர் பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.படுகாயமடைந்தோரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. பஸ் ஓட்டுனரும், நடத்துனரும் தலைமறைவாகிவிட்டனர்.விபத்து குறித்து தகவலறிந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ‘இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்’ என, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.போலீஸ் முதல் கட்ட விசாரணையில், திருப்பத்தில் பஸ்சை வேகமாக செலுத்தியதே விபத்துக்கு காரணம் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.இந்த பஸ் எஸ்.வி.டி. டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.பயணியர் சிலர் கூறுகையில், ”வேகமாக பஸ் ஓட்டும் போது, ஓட்டுனர், மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்,” என்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.