சீனாவில் ஓராண்டுக்குப் பின் 2 உயிரை குடித்தது கொரோனா| Dinamalar

பீஜிங்:சீனாவில் ஓராண்டுக்குப் பின், இருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் மாகாணத்தில், 2019ல் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது. பின் இது உலகம் முழுதும் பரவி பரிதவிக்க வைத்தது.
கொரோனா பரவலுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்ட பின் தான், பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. கடந்த சில மாதங்களாக உலக நாடுகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், சீனாவின் ஜிலன் மாகாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் துவங்கி உள்ளது. இதையடுத்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை அங்கு 2,157 பேர் பாதிக்கப்பட்டு, இருவர் உயிரிழந்து உள்ளனர். ஓராண்டுக்குப் பின் நேற்று தான் அங்கு இருவர் பலியாகி உள்ளனர். சீனாவில் கடந்த 2019ல் இருந்து, இதுவரை 4,636 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.