தனுஷ் ஏன் ஐஸ்வர்யாவை தோழினு சொன்னார்னு இப்போ தானே புரியுது

ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும், தனுஷும் பிரிந்து வாழ்வது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கிய
பயணி
காதல் பாடல் வீடியோ வெளியானது. பயணி குறித்த ஐஸ்வர்யாவின் ட்வீட்டை
தனுஷ்
லைக் செய்வாரா என்று எதிர்பார்த்த நிலையில் அவரோ தனியாக ட்வீட்டே போட்டு வாழ்த்திவிட்டார்.

அதுவும் ஐஸ்வர்யாவை தோழி என்று அழைத்திருக்கிறார் தனுஷ். பதிலுக்கு ஐஸ்வர்யாவும் தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனுஷ் ஏன் ஐஸ்வர்யாவை தோழி என்றார் என்பது குறித்து சமூக வலைதளவாசிகள் புது விளக்கம் அளித்துள்ளனர்.

அதாவது, தோழி என்று பழக ஆரம்பித்து, அவளை காதலியாக்கி, பின்னர் கல்யாணம் செய்து மனைவியாக்கி, 2 பிள்ளைகளுக்கு அம்மாவாக்கி, கொஞ்ச வருஷம் போன பிறகு விவாகரத்தாகி பிரிந்ததற்கு அப்புறம் வாழ்த்துக்கள் தோழினு சொல்லும்போது தான் வாழ்க்கை ஒரு வட்டம்னு தெரிகிறது என்கிறார்கள்.

தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும் முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. இந்நிலையில் தான் ஐஸ்வர்யாவை தோழி என்று அழைத்திருக்கிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

D-யால் மீண்டும் சிக்கலில் ஐஸ்வர்யா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.