திருப்பதியில் ஒரே நாளில் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி:

கொரோனா தொற்று பரவல் காரணமாக திருப்பதியில் கடந்த 2 ஆண்டாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தொற்று பரவல் குறைந்ததையடுத்து ரூ.300 டிக்கெட்டில் தினமும் 30 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசன டிக்கெட் 30 ஆயிரம் பக்தர்களும் என 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, சாதாரண பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்யும் வகையில் கூடுதலாக 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் தரிசனத்திற்கு குவிய தொடங்கினர்.

திருப்பதியில் நேற்று 80,429 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,182 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.13 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

பக்தர்கள் வந்த வாகனங்கள் அலிபிரி சோதனை சாவடியில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணிநேரம் அலிபிரி சோதனை சாவடியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன. இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

இதையும் படியுங்கள்… இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.