போக்குவரத்தை சீர்செய்யுங்கள்.. காவல்நிலையத்திற்கு சென்று கோரிக்கை விடுத்த 4 வயது சிறுவன்..

திருப்பதி அடுத்த சித்தூரில் 4 வயது சிறுவன் ஒருவன் காவல் நிலையத்திற்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யுமாறு கேட்டுக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பலமனேர் நகரை சேர்ந்த சிறுவன் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்ற சிறுவன், பள்ளி அருகே உள்ள சாலையில் குழி தோண்டி, டிராக்டர்களை வழிமறித்து போக்குவரத்திற்கு இடையூறு செய்வதாகவும், போலீசார் வந்து போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும் என்று தனது மழலை குரலில் கேட்டு கொண்டான்.

இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த போலீசார், போக்குவரத்தை சரி செய்வதாக கூறி சிறுவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.