மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையரின் கார் ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையரின் கார் ஓட்டுனர் தற்கொலைக்கான காரணம் என்ன? செல்போனை கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூர் அண்ணாமலை தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (38). இவர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையர் காவேரிக்கு கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவர் தினமும் பணி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் பேசுவதற்காக கற்பகம்பாள் கல்யாண மண்டபத்திற்குச் செல்வது வழக்கம். நேற்று இரவும் பணி முடித்து விட்டு அந்த மண்டபத்திற்குச் சென்றுள்ளார்.
image
இந்நிலையில் வெகுநேரமாகியும் ஜெயச்சந்திரன் வீட்டிற்கு வராததால் அவரது மனைவி தமிழரசி கற்பகம்பாள் திருமண மண்டபத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்குள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழரசி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அங்குவந்த பொதுமக்கள் ஜெயச்சந்திரனின் உடலை கீழே இறக்கி மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
image
அங்கு அவரை பரிசோதனை செய்யத மருத்துவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுக்கள் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து ஜெயச்சந்திரனின் உடலை பரிசோதனை செய்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஜெயச்சந்திரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க சென்ற மயிலாப்பூர் போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.