15 ஆண்டுக்கு பின் ஹோலி| Dinamalar

உத்தர கன்னடா : 15 ஆண்டுக்கு பின் கிராமத்தில் ஹோலி கொண்டாடப்பட்டது.உத்தர கன்னடாவின் முண்டகோடா அருகே உள்ள அரசினகரே கிராமத்தில் 2007 முன் வரை அங்குள்ள லம்பானி இன மக்கள் ஹோலி பண்டிகை கோலாகமாக கொண்டாடி வந்தனர். அப்போது ஊரின் நடுவில் நீண்ட கட்டைகளை அடுக்கி வைத்து,

அதில் தீ வைத்து, அதை சுற்றி நடனமாடுவர். கடந்த 2007ல் நடந்த கொண்டாட்டத்தின் போது மோதல் ஏற்பட்டது. அதன்பின் ஹோலி பண்டிகை கொண்டாடப்படவில்லை. தற்போது பாரம்பரிய ஹோலியை நிறுத்த கூடாது என ஊர் பெரியவர்கள் கூறியதை தொடர்ந்து, இம்முறை கொண்டாடப்பட்டது.நேற்று முன்தினம் கொண்டாடினர். பூஜை செய்து நெருப்பு அணைந்தவுடன், அந்த சாம்பலை எடுத்து பூசி கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.