73 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்ட ஸ்ரீநகர் -கார்கில்-லே சாலை!

ஜம்மு காஷ்மீர் -லடாக் இடையே ஸ்ரீநகர்-கார்கில்-லே ரோட்டில் உள்ள ஜோஜி லா கணவாய் பனியால் மூடப்பட்ட நிலையில், 73 நாட்களுக்குப்பின் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

நேற்று அத்தியாவசியப் பொருட்களுடன் ஏராளமான சரக்கு வாகனங்கள் ஜோஜி லா கணவாயைக் கடந்து கார்கில் சென்றடைந்தன. முதல் முறையாக இந்த சாதனையை எல்லைச் சாலைகள் அமைப்பு உருவாக்கியுள்ளது. 

கடும் பனிப்பொழிவுக்கு ஜனவரி 5 ஆம் தேதி இச்சாலை மூடப்பட்டது. இதையடுத்து சாலையின் இருபுறமும் மூடிய பனியை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக 73 நாட்களில் மீண்டும் சாலை திறக்கப்பட்டது. குளிர் காலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஜோஜிலா கணவாய், 160 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை மூடியிருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.