80 லட்சம் ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை விற்க முயன்ற 3 பேர் கைது

திருப்பூரில், 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை விற்க முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளியங்காடு பகுதியில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மத்திய வனப்புலனாய்வு குழுவினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, யானை தந்தங்களை விற்க முயன்ற வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த  வீரப்பன், முருகன், அவினாசி ஆகிய மூவரும் சிக்கினர்.

இதையடுத்து, அவர்களிடம் 4 துண்டுகளாக இருந்த யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கைதான வீரப்பனின் நண்பர், விற்பனை செய்யக் கூறி யானை தந்தங்களை கொடுத்தது தெரிய வந்ததை அடுத்து, தலைமறைவாக உள்ள அந்த நபரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.