Dhanush:ஐஸ்வர்யாவுடன் 'டீல்': வேலையை ஆரம்பித்த தனுஷ்

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். தாங்கள் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.

அவர்களை சேர்த்து வைக்க முயன்ற இரு வீட்டாரும் தோல்வி அடைந்துவிட்டனர். பிள்ளைகள் யாத்ரா, லிங்காவுக்கு அப்பா, அம்மா இரண்டு பேருமே வேண்டும். ஆனால் அது சாத்தியம் இல்லை என்றாகிவிட்டது.

இந்நிலையில் தான் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒரு டீலுக்கு வந்திருக்கிறார்கள். நான் வேலையில் பிசியாக இருக்கும்போது பிள்ளைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிசியாக இருக்கும்போது நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாராம் ஐஸ்வர்யாம். தனஷும் சரி என்று கூறிவிட்டாராம்.

இதையடுத்தே தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தான் நடித்து வரும் நானே வருவேன் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது மூத்த மகன் யாத்ராவை வரவழைத்தார். இந்நிலையில் சென்னையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு யாத்ரா, லிங்காவை அழைத்துச் சென்றார்.

அது மட்டும் அல்லாமல் மேடை ஏறி தன் மகன்களுக்காக தான் எழுதிய தாலாட்டு பாடலை பாடி அசத்தினார். தற்போது ஃப்ரீயாக இருப்பதால் மகன்களுடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்பா, நாங்கள் உங்களுடனேயே இருந்துவிடட்டுமா என்று தனுஷிடம் மகன்கள் கேட்டார்களாம். அப்படி எல்லாம் பேசக் கூடாது, அம்மா பாவம்ல, அவருடனும் இருக்க வேண்டும் என்றாராம்.

Dhanush:இடம் பார்த்து அடித்த லதா: வழிக்கு வந்த தனுஷ்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.