அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் கூறவில்லை: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் கூறவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்திருக்கிறார். தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராகும் வரை நான் பேசியது அனைத்தும் சரியானதே. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர், சிகிச்சை அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எனக்கு தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவிகளை அகற்ற உத்தரவிடப்பட்டதா? என ஓ.பி.எஸ்.யிடம் ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.