அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல், பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்குதல் உட்பட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதை உடனடியாக வழங்கக் கோரி மத்திய அரசுக்கு
அரசு ஊழியர்கள்
தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல், பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்குதல் உட்பட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள், இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு

இது குறித்து, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல், 18 மாத பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்குதல், தபால், ராணுவம், ரயில்வே உள்ளிட்ட துறைகளில் தனியாரை அனுமதிக்க கூடாது, எல்.ஐ.சி., – வங்கி உட்பட, பொதுத் துறைகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்பது உட்பட, 13 கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28, 29 ஆகிய தேதிகளில், நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம். இதில், மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.