'எதற்கும் துணிந்தவன்' பார்த்துவிட்டு மகன், மகள் சொன்ன வார்த்தை: சூர்யா நெகிழ்ச்சி..!

சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர்
பாண்டிராஜ்
இயக்கத்தில்
சூர்யா
நடித்துள்ள ‘
எதற்கும் துணிந்தவன்
‘ படம் தற்போது வெளியாகியுள்ளது. அண்மையில் வெளியான சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் திரையரங்குகளில் வெளியாகியுள்ள சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை
சன் பிக்சர்ஸ்
நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிததுள்ளார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே ‘ஜெய் பீம்’ பட விவகாரத்தால் பல திரையரங்குகளில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க மற்றும் வன்னியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையெல்லாம் கடந்து திரையரங்குகளில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

தனுஷ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து வந்த வாழ்த்து செய்தி: குஷியில் ஐஸ்வர்யா..!

இந்நிலையில் சூர்யா அளித்த பேட்டி ஒன்றில் படம் பார்த்துவிட்டு உங்களது மகள் மற்றும் மகன் என்ன சொன்னார்கள் என கேட்கப்பட்டது. அதற்கு சூர்யா என்னுடைய மகள் படத்தைப் பார்த்துவிட்டு படம்பிடித்து இருப்பதாகவும் என்னுடைய ரோல் நன்றாக இருந்ததாகவும், ஜெய் பீம், சூரரைப்போற்று படங்களை தொடர்ந்து இந்த படமும் தன்னுடைய ஃபேவரைட் படம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், என்னுடைய மகன் உங்களிடம் இருந்து இப்படி ஒரு அவதாரத்தை எதிர்பார்க்கவில்லை படம் நன்றாக இருப்பதாக கூறியதாக தெரிவித்துள்ளார். படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சூர்யா கூறியுள்ளார்.

வெயிட்டிங் லிஸ்ட் அதிகம்; இயக்குனர் எழில் கலகல பேச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.