ஏழுமலையான் உண்டியல் காணிக்கை…திருப்பதி தேவஸ்தானம் சொன்ன ஹேப்பி நியூஸ்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலான நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா மூன்றாவது அலை குறைந்துள்ளதை அடுத்தும், நாடு முழுவதும் பெரும்பாலோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாலும் திருமலை திருப்பதிக்கு பக்தர்கள் மீண்டும் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இலவச தரிசனத்துக்கு நாள்தோறும் சராசரியாக 30ஆயிரம் பேரும், கட்டண தரிசனத்தில் 28 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

ஐந்து இடங்களில் திருப்பதியும் ஒன்னு: மாஸ் ப்ளானுடன் களமிறங்கும் தேவஸ்தானம்!

கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், இலவச தரிசனத்துக்கான டோக்கன்கள் கோவிந்தராஜஸ்வாமி சத்திரம், சீனிவாசம், பூதேவி காம்பளக்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் வழங்கப்படுகின்றன.

இதனால் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் (மார்ச் 19) மட்டும் 80 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அசானி புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை!

அன்றைய தினம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ஒரே நாளில் 5.13 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் எண்ணிக்கை கூட துவங்கியுள்ளதுடன், உண்டியல் காணிக்கையும் அதிகரித்துள்ளதால் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.