கப்பலில் மோதிய படகு 6 பேர் பலி: பலர் மாயம்| Dinamalar

டாக்கா : வங்கதேசத்தில் சரக்கு கப்பல் மீது மோதிய படகு ஆற்றில் மூழ்கிய விபத்தில் ஆறு பேர் பலியாயினர். மாயமான பயணியரை தேடும் பணி தொடர்கிறது.

நம் அண்டை நாடான வங்கதேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் உள்ள ஷிடாலக்சயா ஆற்றில் நேற்று 50க்கும் மேற்பட்ட பயணியருடன் ஒரு படகு முன்ஷிகஞ்ச்சென்று கொண்டு இருந்தது.வழியில் சிறிய சரக்கு கப்பல் மீது மோதிய படகு ஆற்றில் மூழ்கியது. தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மூன்று பெண்கள் உள்பட ஆறு பேரின் உடல்களை மீட்டுஉள்ளனர். மீட்பு பணிகள்தொடரும் நிலையில் மேலும் பலர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.