கேரள லாட்டரியில் சென்னை பெண்ணுக்கு அடித்தது யோகம்!

சென்னையை சேர்ந்தவர் சுப்பராவ் பத்மம். வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் அடிக்கடி கேரளாவில் உள்ள கோவில்களுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம்.

சமீபத்தில் அவர் கேரளாவுக்கு சுற்றுலா சென்றபோது ஆலுவாவில் உள்ள ஒரு சாலையோர கடையில்
கேரள லாட்டரி சீட்டு
வாங்கியுள்ளார். அதற்கு நடைபெற்ற குலுக்கலில் சுப்பராவ் பத்மம் வாங்கியிருந்த சீட்டு இரண்டாவது பரிசாக 25 லட்சம் பரிசு விழுந்துள்ளது.

இந்த மகிழ்ச்சிகரமான தகவலை. சென்னையில் இருந்த பத்மத்திடம்,. லாட்டரி சீட்டு விற்பனை செய்து வரும் சுமிஜா தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ள பத்மம் குடும்பத்தினர் ஓரிரு நாட்களில் ஆலுவா சென்று பரிசு சீட்டை பெற்று கொள்வதாக சுமிஜாவிடம் தெரிவித்துள்ளனர்.

ஆலுவாவில் பல ஆண்டுகளாக லாட்டரி சீட்டு விற்பனை செய்துவரும் சுமிஜா, கடந்த ஆண்டு தான் விற்பனை செய்த லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக 6 கோடி ரூபாய் விழுந்தது.

அந்த சீட்டை வாங்கிய நபர், அதனை சுமிஜாவிடம் கொடுத்து வைத்திருந்தார். பரிசு விழுந்ததும், சுமிஜா அந்த தகவலை சீட்டு வாங்கியவருக்கு தெரிவித்து, சீட்டையும் ஒப்படைத்தார். அப்போது அவரது நேர்மையை அனைவரும் பாராட்டினர்.

தற்போது அவர் சென்னையை சேர்ந்தவருக்க 25 லட்சம் ரூபாய் பரிசு விழுந்த தகவலை தெரிவித்து மீண்டும் தனது நேர்மையை நிரூபித்துள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.